இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, September 15, 2011

107- பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே

8 comments


படம் :   படிச்சபுள்ள (Padichapulla)
பாடல் :  
பூங்காற்றே இது போதும் (Poonkaatre ithu pothum)
பாடியவர் :   K.S. சித்ரா, மனோ, S.P.பாலசுப்பிரமணியம்
இசை :   இசைஞானி இளையராஜா 
வருடம் : 1989
இயக்குநர் : செந்தில்நாதன்
நடிகர்கள் :
அர்ஜூன், சீதா
தயாரிப்பாளர் : கிஷோர்
எடிட்டிங் : ஷ்யாம்  



         
வேலை பளு காரணமாக சில நாட்கள் பாடல்களை சரிவர பதிய இயலவில்லை...
ஒருவழியாக தம் பிடித்துக்கொண்டு என்ன பாடல் பதியலாம் என்று எனது நன்பர் திரு.சித்தார்த்திடம் கேட்டேன்...
அவரது விருப்பம்தான் இந்த பாடல்... நானும் எப்போதோ கேட்ட நியாபகம்... அருமையான பாடல்...

1989ம் ஆண்டு திரு.செந்தில்நாதன் அவர்களின் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் அர்ஜீன் நடிப்பில் வெளிவந்த ”படிச்சபுள்ள” என்ற திரைப்படத்திற்காக
நம் பாலுஜியும் குயில் பாட்டு சித்ராவும் இணைந்து கலக்கிய பாடல்...

பாலுஜி பாடலில் பூங்காற்றை தீண்ட வேண்டாம் என்று அவர் பாட்டுக்கு பாடி விட்டார்.. ஆனால் அவர் உடைய அந்த அமுத கானம்
அதே பூங்காற்றின் வழியாக நமது உடலை தீண்ட நம் மனம் போராடிக்கொண்டுதான் இருக்கின்றது...

படத்தின் தகவல்கள் எனது நண்பருக்கும் சரிவர தெரியவில்லை..

அருமையான பாடலை இப்போது கேட்டு மகிழுங்கல் நண்பர்களே...


இந்த பாடலின் ஒளிப்பதிவு திரு.இளையராஜாவின் குரலில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. அதியும் கேளுங்கள்...





Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Poongatre_Ithu_Pothum.mp3



Poongatre idhu pothum | Online Karaoke


பாடல் வரிகள்



பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
என்னத்தை கிள்ளி கிள்ளி
போகாதே என் தாபம் தீராதே

பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே

சரணம் 1

பூ பூத்த சோலை பொன் மாலை வேளை
பாடல் காற்றினில் கேட்டாயோ
ஏதேதோ எண்ணம் தானாக துள்ளும்
ஏக்கம் தான் அதை தீர்ப்பாயோ
நீதானே என் காதல் சங்கீதம்
நான் பாடும் பூமேடை உன் தேகம்
பொன் தாலிதான் தந்து நீ கூடு
என் மேனி நீ உண்ணும் தேன் கூடு
கண்ணே... கண்ணே...
வந்தேனே... நானே...

பூங்காற்றே ... ஹே..ஹே..ஹே..ஹேய்
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
என்னத்தை கிள்ளி கிள்ளி
போகாதே என் தாபம் தீராதே
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே

சரணம் 2

காவேரி இங்கு ஓடோடி வந்து
காதல் சங்கமம் ஆகாதோ
பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல
ஆசை தோன்றுது ஏதேதோ
நீ இன்றி பூந்தென்றல் வீசாது
நீ இன்றி என் ஜீவன் வாழாது
நான் என்றும் நீ என்றும் வேறேது
என் ஆசை எப்போதும் மாறாது
அன்பே... அன்பே...
என் வாழ்வே... நீயே...

பூங்காற்றே ... ஹே..ஹே..ஹே..ஹேய்
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க
என்னத்தை கிள்ளி கிள்ளி
போகாதே என் தாபம் தீராதே
பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை என் மனம் தாங்காதே
 
 
 
 

Visitors of This Blog